Saturday 20 July 2013

Just feel it..
சாரல் அடிக்கும்
ஜன்னலின் ஓரம்
நிற்கையில்
என் நினைவில் கொஞ்சம்
கசிகின்றன
உன் ஞாபகத் துளிகள்
...
அதோ செல்லும்
கருமேகம்
உன் பிரிவை
உணர்த்திச் செல்கிறது..
உன்னுடன்
பழகும் போது
தெரியவில்லை
நீ வெறும் கடந்து செல்லும்
மேகம் தானென்று

காதல் வெறும்
கனவாய்
காகிதக் கவிதையாய்
போகுமென்று
கனவிலும் நான்
நினைக்கவில்லை ;-(

உன் கரம் கோர்க்கையில்
நான் அறியவில்லை
இவை நிரந்தரமாய்
என்னை விட்டுப் போய்
கதற வைக்கும்
விரல்கள் என்று

கனவு கலைந்து
எழுந்த ஒரு விடியலில்
நீ காணாமல்
போயிருந்தாய்
விடை பெறும்
பேற்றினைக் கூட
எனக்குக் கொடுக்காமல் ;-(

நீ என்னைப்
பிரிந்தது
ஓர் மழை நாளில் தான்
என்றதாலோ என்னவோ
உன் நினைவுகள்
நெஞ்சில்
கசியும் போதெல்லாம்
என் மனதோரமும்
புயல் காற்று
என் விழியோரமும் ஓயாத
மழைத் துளிகள்...


                                              ....>>அஜய்